Monday, November 5, 2012

புதிர் 11 விடைகள்

1. காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே....( சித்தி )

2. கண்ணே கலைமானே கன்னி மயிலென.....( மூன்றாம் பிறை )

3. ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு.... ( தெய்வத்திருமகள் )

Madhav அவர்கள் 2ஆவது பாடலுக்கு கனா காணும் கண்கள் மெல்ல...(அக்னிசாட்சி) என்ற பாடலையும் அனுப்பியிருந்தார். ஆனால் அதில் ஆரிரோ என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்றாலும் அந்தப் பாடல் என் குறிப்பிற்கு சரியாக அமைந்த படியால் அதையும் சரியான விடையாகவே  ஏற்றுக் கொள்கிறேன்.


இதற்கு சரியான விடையளித்தோர்:  Ramarao, Ramachandran Vaidyanathan, Arunthathi, Madhav, 10அம்மா, ஸ்ரீதேவி

சில விடைகள் மட்டும் அனுப்பியோர்: யோசிப்பவர், Renuka


இவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

மேலும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஒளி வெள்ளம் தணிந்த பின் என் புதிர் வெள்ளம் ஓடும்.....

 

Thursday, October 25, 2012

புதிர் 11

வணக்கம்,

                   என் காலதாமதத்திற்கு வருந்துகிறேன். இனி புதிர்...

1. ஆக மொத்ததில் பெண்களுக்கு தூக்கமே கிடையாதா?

2. ஒரு பைத்தியகார பெண்ணுக்கு கூட தாலாட்டு வேண்டுமாம்!!

3. தன் ’தெய்வமகளு’க்கு அப்பாவின் தாலாட்டு என்ன?

என்ன பாடல்கள்?


புதிர் 10 விடைகள்: 1 அழகிய மிதிலை நகரினிலே... (அன்னை)
                                       2 செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.. (முள்ளும் மலரும்)
                                       3 பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்...(பையா)

ஒற்றுமை: அனைத்துப் பாடல்களும் காரில் சென்றவாரே பாடும் பாடல்கள்.

இதற்கு அனைத்து விடைகளையும் சரியாக அனுப்பியவர்கள்: 10அம்மா, ஸ்ரீதேவி, Ramarao
 
சில விடைகள் மட்டும் அனுப்பியோர்: நாகராஜன், யோசிப்பவர், Madhav, Muthu

அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

Thursday, October 4, 2012

புதிர் 10

வணக்கம்,
                     சிறிய இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் எதிர்கொள்ள ஆவலோடு வந்துள்ளேன். எனவே தாமதம் செய்யாமல் விடையளியுங்கள்.


1. அழகானதொரு ஊரில் சீதை யாருக்காக காத்திருக்காளோ?

2. தாழம்பூவில் வீசும் காற்று என் மீதும் பட்டது.

3. காற்றே, மலர் போல வந்தவள் இவள்.

வழக்கம் போலவே அனைத்து பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
என்ன பாடல்கள்?

Friday, September 21, 2012

புதிர் 9 விடைகள்

1. சொட்டுனு சொட்டுனு சொட்டுது பாரு இங்கே...(ஆட வந்த தெய்வம்)

2. வான் மேகம் பூப்பூவாய் தூவும்...(புன்னகை மன்னன்)

3. விண்ணோடு மேளச்சத்த்ம் என்ன...(மழை)

இதற்கு சரியாக விடையளித்தவர்கள்: 10அம்மா, ஸ்ரீதேவி, ரேணுகா, Ramarao, Madhav ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

முதல் பாடலை குறிப்பு இல்லாமல் கண்டுகொண்ட Muthu அவர்களுக்கும், 10அம்மா அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுகள்.

அடுத்த புதிரை சிறிது கால இடைவெளி விட்டு மீண்டும் தொடருவேன். அதுவரை தயவுசெய்து காத்திருங்கள்....

Wednesday, September 12, 2012

புதிர் 9

1. இங்கே மழை சொட்டுன்னுதான் கொட்டுமாம்.

2. ஆகாய பஞ்சுகள் பூ மாரி தூவுதாம்.

3. வானில் என்ன அது கொட்டுச்சத்தம்?

விடைகள்?


புதிர் 8 விடைகள்: 1.மச்சானைப் பாத்திங்களா? மல வாழ தோப்புக்குள்ள... (அன்னக்கிளி)
                                     2. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு....(புது நெல்லு புது நாத்து)
                                     3. மச்சான் மீசை வீச்சருவா...(தில்)

இதற்கு சரியாக விடை அளித்த மற்றும் முயற்சி செய்த முகிலன், 10 அம்மா,  Anthony, G.L. Vignesh, Ramarao, Arun, Anitha, யோசிப்பவர், ரேணுகா, ஸ்ரீதேவி, முத்து ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.  

Friday, September 7, 2012

புதிர் 8

1. எம் மாமன் மவன் வாழத் தோப்புல தொலஞ்சுப்ட்டான். செத்த கண்டுபுடிச்சி தாரீகளா?

2. அதுமட்டுமில்ல அவன் ஆளு கொஞ்சம் கருப்புதேன்.கொஞ்சம் கஞ்சாம்பட்டி.

3. அப்றம் அவன் மீசை கூட ஐய்யனாராட்டம் இருக்கும்.

கண்டுபுடிச்சுடுவீகளா?

Thursday, September 6, 2012

புதிர் 7 விடைகள்

1. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று...(குழந்தையும் தெய்வமும்)

2.தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே...(சின்ன தம்பி)

3. நிலா காய்கிறது நிறம் தேய்கிறது.....(இந்திரா)


இதற்கு விடை அளித்த Ramachandran Vaidyanadan, Ramarao, Rajesh Durairaj, ஸ்ரீதேவி, யோசிப்பவர், 10 அம்மா, Anitha, Arun, shanthi ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

புதிர் 8 விரைவில்...........

 

Wednesday, August 29, 2012

புதிர் 7

1. கடவுளுக்கும், பாப்பாவுக்கும் ஒரே குணம். அது என்ன பாட்டு?

2. தொட்டிலில் ஆட வந்த நிலவா நீ? அது என்ன பாட்டு?

3. நிலவு தேய்வதையும் ரசிக்க வேண்டுமாம். அது என்ன பாட்டு?




புதிர் 6 விடைகள்: 1. கல்யாண சமையல் சாதம்.....( மாயா பஜார் )
                                     2. என்ன சமையலோ.....(உன்னால் முடியும் தம்பி)
                                     3. நித்தம் நித்தம் நெல்லுச் சோறு.... நேத்து வச்ச மீன் குழம்பு                             என்ன இழுக்குதய்யா.....(முள்ளும் மலரும்)


இதற்கு விடை அளித்த, ramachandran vaithyanadan, anitha, shanthi, rajesh durairaj, 10அம்மா, முகிலன், யோசிப்பவர், ஸ்ரீதேவி, இன்னமுதம் ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள். 

Tuesday, August 21, 2012

புதிர் 6

1. யாராவது பீமன் மகன் போல் சாப்பிட முடியுமோ? அம்மாடி! அது என்ன பாட்டு?

2. அண்ணனும் தங்கையும் சேர்ந்து எங்களாலும் சமைக்க முடியும் என நிரூபித்ததொரு பாடல், என்ன பாடல்?

3. முந்தின நாள் வச்ச வஞ்சிரம் குழம்புதான் அவங்களுக்கு புடிக்குமாம். அது என்ன பாட்டு?

புதிர் 5 விடைகள்

 ”நான்” - நிலா

1 வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை.....(மிஸ்ஸியம்மா)
2 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே.....(மெல்ல திறந்தது கதவு)
3 வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை.... (மின்சார கனவு)


அடுத்த புதிர் விரைவில் கொஞ்சம் எளிமையாக.....

Sunday, August 12, 2012

புதிர் 5

இந்த முறை அதே புதிர்தான். சற்றே வித்தியாசமான முறையில் புதிர்களாக இருக்கிறது.இந்தப் புது முயற்சியின் நிறை குறைகள் வரவேற்கப்படுகின்றன. இனி புதிர்கள்...

1. உங்கள் குடும்ப பிரச்சினை தீர்த்து வைக்க ”நான்” வர வேண்டுமா?

2. ”என்” வீட்டில் என்னை தேடுகிறார்களே!

3. உன்னோடு விளையாடுவதற்கும் “ நான்”தான் வேண்டுமா?


இவை மூன்றும் மூன்று பாடல்கள். மூன்று பாடல்களிலும் உள்ள ”நான்”  “என்” போன்றவை ஒரே வார்த்தைதான். அதைக் கண்டு கொண்டால் பாடல் புதிர்களின் விடைகள் தானே வரும்.

அது சரி ”நான்” யாரென்று தெரியவேண்டாமா? ”என்னை”ப் பற்றி பாடாத கவிகளே இல்லை.



புதிர் 4 விடை: ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே கான்ச்சு போச்சுடா
                              இந்த ஊரும் புடிக்கல உலகம் புடிக்கல........
                               படம்: இதயம்.

இதற்கு விடை அளித்த 10அம்மா, அந்தோணி, சின்ன கனி, ஸ்ரீதேவி, யோசிப்பவர், சாந்தி, ராஜேஷ் துரைராஜ், மற்றும் அனிதா ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள். 

Thursday, August 9, 2012

புதிர் 4

கோடைன்னா  காயத்தான்  செய்யும். அதுக்காக ஊரே புடிக்கலன்றியேப்பா.

அது என்ன பாடல்?


புதிர் 3 விடை: குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்
                               குடிச்சா நீர்மோரு புடிச்சா நீதான்டி 

சரியான விடை அளித்த அந்தோணி, ஸ்ரீதேவி, மற்றும் விஜய் ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Monday, August 6, 2012

புதிர் 3

 நீராடி முடித்து ஈசனை வணங்கி பானகம் அருந்தி உன்னை கைப்பிடிப்பேன்

அது என்ன பாடல்?

Sunday, August 5, 2012

விடைகள்

புதிர்1: நலம் நலமறிய ஆவல்....

புதிர்2: தூங்காதே தம்பி தூங்காதே......

நன்றி

புதிர் 1 மற்றும் 2ல் நிறைய ஆர்வலர்கள் விடை அளித்திருந்தனர்.
அனைவருக்கும் நன்றி. புதிர் 3 விரைவில்....

Thursday, August 2, 2012

புதிர் 2

எம்.ஜி.ஆர்.க்கும், கமலுக்கும் தங்களின் "small brother"ஐ disturb செய்வதுதான் வேலையோ?

அது என்ன பாட்டு?

Wednesday, August 1, 2012

புதிர் 1

இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமே எனக்கில்லை கனவில்லையே


இப்பாடலின் முதல் வரி என்ன?

புதிர் பற்றி

இது சாதாரண புதிர்வகைதான்.
இங்கு தரப்படும் பாடல் பற்றிய கேள்விகளுக்கு விடை தர  வேண்டும்.
அவ்வளவே.

முதல் பதிவு

ஹாய்,
            இது பாடல் பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட
ஒரு வலை.எனவே இது வரிகளின் வலை