Friday, September 21, 2012

புதிர் 9 விடைகள்

1. சொட்டுனு சொட்டுனு சொட்டுது பாரு இங்கே...(ஆட வந்த தெய்வம்)

2. வான் மேகம் பூப்பூவாய் தூவும்...(புன்னகை மன்னன்)

3. விண்ணோடு மேளச்சத்த்ம் என்ன...(மழை)

இதற்கு சரியாக விடையளித்தவர்கள்: 10அம்மா, ஸ்ரீதேவி, ரேணுகா, Ramarao, Madhav ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

முதல் பாடலை குறிப்பு இல்லாமல் கண்டுகொண்ட Muthu அவர்களுக்கும், 10அம்மா அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுகள்.

அடுத்த புதிரை சிறிது கால இடைவெளி விட்டு மீண்டும் தொடருவேன். அதுவரை தயவுசெய்து காத்திருங்கள்....

Wednesday, September 12, 2012

புதிர் 9

1. இங்கே மழை சொட்டுன்னுதான் கொட்டுமாம்.

2. ஆகாய பஞ்சுகள் பூ மாரி தூவுதாம்.

3. வானில் என்ன அது கொட்டுச்சத்தம்?

விடைகள்?


புதிர் 8 விடைகள்: 1.மச்சானைப் பாத்திங்களா? மல வாழ தோப்புக்குள்ள... (அன்னக்கிளி)
                                     2. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு....(புது நெல்லு புது நாத்து)
                                     3. மச்சான் மீசை வீச்சருவா...(தில்)

இதற்கு சரியாக விடை அளித்த மற்றும் முயற்சி செய்த முகிலன், 10 அம்மா,  Anthony, G.L. Vignesh, Ramarao, Arun, Anitha, யோசிப்பவர், ரேணுகா, ஸ்ரீதேவி, முத்து ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.  

Friday, September 7, 2012

புதிர் 8

1. எம் மாமன் மவன் வாழத் தோப்புல தொலஞ்சுப்ட்டான். செத்த கண்டுபுடிச்சி தாரீகளா?

2. அதுமட்டுமில்ல அவன் ஆளு கொஞ்சம் கருப்புதேன்.கொஞ்சம் கஞ்சாம்பட்டி.

3. அப்றம் அவன் மீசை கூட ஐய்யனாராட்டம் இருக்கும்.

கண்டுபுடிச்சுடுவீகளா?

Thursday, September 6, 2012

புதிர் 7 விடைகள்

1. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று...(குழந்தையும் தெய்வமும்)

2.தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே...(சின்ன தம்பி)

3. நிலா காய்கிறது நிறம் தேய்கிறது.....(இந்திரா)


இதற்கு விடை அளித்த Ramachandran Vaidyanadan, Ramarao, Rajesh Durairaj, ஸ்ரீதேவி, யோசிப்பவர், 10 அம்மா, Anitha, Arun, shanthi ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

புதிர் 8 விரைவில்...........